thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalவலியறிதல்Valiyaridhal
குறள் 472

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

Olva Tharivadhu Arindhadhan Kandhangich

Chelvaarkkuch Chellaadhadhu Il

Nothing hampers the firm who know What they can and how to go

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை

Couplet

Who know what can be wrought, with knowledge of the means, on this,Their mind firm set, go forth, nought goes with them amiss

Explanation

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and