thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇல்வாழ்க்கைIlvaazhkkai
குறள் 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை.

Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan

Muyalvaarul Ellaam Thalai

Of all who strive for bliss, the great Is he who leads the married state

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

SP (சாலமன் பாப்பையா)

கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

MK (மு.கருணாநிதி)

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்

Couplet

In nature's way who spends his calm domestic days,'Mid all that strive for virtue's crown hath foremost place

Explanation

Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state