thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து செயல்வகைTherindhuseyalvakai
குறள் 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

Ennith Thunika Karumam Thunindhapin

Ennuvam Enpadhu Izhukku

Think and dare a proper deed Dare and think is bad in need

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

SP (சாலமன் பாப்பையா)

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

MK (மு.கருணாநிதி)

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு

Couplet

Think, and then dare the deed! Who cry,'Deed dared, we'll think,' disgraced shall be

Explanation

Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly