thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalதெரிந்து செயல்வகைTherindhuseyalvakai
குறள் 463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai

Ookkaar Arivutai Yaar

The wise risk not their capital In doubtful gains and lose their all

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

SP (சாலமன் பாப்பையா)

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்

Couplet

To risk one's all and lose, aiming at added gain,Is rash affair, from which the wise abstain

Explanation

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal