சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
Sitrinam Anjum Perumai Sirumaidhaan
Sutramaach Choozhndhu Vitum
The ignoble the noble fear The mean hold them as kinsmen dear
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
SP (சாலமன் பாப்பையா)
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
MK (மு.கருணாநிதி)
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
Couplet
The great of soul will mean association fear;The mean of soul regard mean men as kinsmen dear
Explanation
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends