thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇல்வாழ்க்கைIlvaazhkkai
குறள் 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

Anpum Aranum Utaiththaayin Ilvaazhkkai

Panpum Payanum Adhu

In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

SP (சாலமன் பாப்பையா)

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

MK (மு.கருணாநிதி)

இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை

Couplet

If love and virtue in the household reign,This is of life the perfect grace and gain

Explanation

If the married life possess love and virtue, these will be both its duty and reward