பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகுற்றங்கடிதல்Kutrangatidhal
குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
Viyavarka Egngnaandrum Thannai Nayavarka
Nandri Payavaa Vinai
Never boast yourself in any mood Nor do a deed that does no good
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
SP (சாலமன் பாப்பையா)
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.
MK (மு.கருணாநிதி)
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது
Couplet
Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good
Explanation
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things