thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகுற்றங்கடிதல்Kutrangatidhal
குறள் 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

Viyavarka Egngnaandrum Thannai Nayavarka

Nandri Payavaa Vinai

Never boast yourself in any mood Nor do a deed that does no good

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

SP (சாலமன் பாப்பையா)

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

MK (மு.கருணாநிதி)

எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது

Couplet

Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good

Explanation

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things