thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்ArasiyalஅறிவுடைமைArivutaimai
குறள் 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul

Meypporul Kaanpa Tharivu

To grasp the Truth from everywhere From everyone is wisdom fair

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

SP (சாலமன் பாப்பையா)

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

MK (மு.கருணாநிதி)

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

Couplet

Though things diverse from divers sages' lips we learn,'Tis wisdom's part in each the true thing to discern

Explanation

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom