thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஇல்வாழ்க்கைIlvaazhkkai
குறள் 42

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum

Ilvaazhvaan Enpaan Thunai

His help the monk and retired share, And celibate students are his care

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

SP (சாலமன் பாப்பையா)

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்

MK (மு.கருணாநிதி)

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்

Couplet

To anchorites, to indigent, to those who've passed away,The man for household virtue famed is needful held and stay

Explanation

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead