பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகேள்விKelvi
குறள் 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi
That ear though hearing is dulled Which is not by wisdom drilled
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
SP (சாலமன் பாப்பையா)
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
MK (மு.கருணாநிதி)
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
Couplet
Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear
Explanation
The ear which has not been bored by instruction, although it hears, is deaf