thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகேள்விKelvi
குறள் 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

Katrila Naayinung Ketka Aqdhoruvarku

Orkaththin Ootraan Thunai

Though not learned, hear and heed That serves a staff and stay in need

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

SP (சாலமன் பாப்பையா)

கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

MK (மு.கருணாநிதி)

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்

Couplet

Though learning none hath he, yet let him hear alway:In weakness this shall prove a staff and stay

Explanation

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity