thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalகல்விKalvi
குறள் 399

தாமின் புறுவது உலகின் புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.

Thaamin Puruvadhu Ulakin Purak

Kantu Kaamuruvar Katrarin Thaar

The learned foster learning more On seeing the world enjoy their lore

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

SP (சாலமன் பாப்பையா)

தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

MK (மு.கருணாநிதி)

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்

Couplet

Their joy is joy of all the world, they see; thus moreThe learners learn to love their cherished lore

Explanation

The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it