thiruvalluvarதிருக்குறள்
பொருட்பால்Porutpaalஅரசியல்Arasiyalஇறைமாட்சிIraimaatchi
குறள் 384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு.

Aranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa

Maanam Utaiya Tharasu

A brave noble king refrains from vice Full of virtue and enterprise

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

SP (சாலமன் பாப்பையா)

தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

MK (மு.கருணாநிதி)

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்

Couplet

Kingship, in virtue failing not, all vice restrains,In courage failing not, it honour's grace maintains

Explanation

He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice