thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஊழியல்Oozhiyalஊழ்Oozh
குறள் 375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு.

Nallavai Ellaaan Theeyavaam Theeyavum

Nallavaam Selvam Seyarku

In making wealth fate changes mood; The good as bad and bad as good

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

SP (சாலமன் பாப்பையா)

நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

MK (மு.கருணாநிதி)

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்

Couplet

All things that good appear will oft have ill success;All evil things prove good for gain of happiness

Explanation

In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)