thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஊழியல்Oozhiyalஊழ்Oozh
குறள் 372

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum

Aakaloozh Utrak Katai

Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

SP (சாலமன் பாப்பையா)

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

MK (மு.கருணாநிதி)

அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்

Couplet

The fate that loss ordains makes wise men's wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless

Explanation

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge