thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஅவா அறுத்தல்Avaavaruththal
குறள் 364

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

Thoouymai Enpadhu Avaavinmai Matradhu

Vaaaimai Venta Varum

To nothing crave is purity That is the fruit of verity

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

SP (சாலமன் பாப்பையா)

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

MK (மு.கருணாநிதி)

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்

Couplet

Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow

Explanation

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth