காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Kaamam Vekuli Mayakkam Ivaimundran
Naamam Ketakketum Noi
Woes expire when lust, wrath, folly Expire even to name, fully
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.
SP (சாலமன் பாப்பையா)
விருப்பு, வெறுப்பு, மயக்கம் என்னும் இம்மூன்றன் பெயருங்கூட உள்ளத்திற்குள் இல்லாது போனால், அவற்றால் வரும் துன்பங்களும் இல்லாமல் போகும்.
MK (மு.கருணாநிதி)
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்
Couplet
When lust and wrath and error's triple tyranny is o'er,Their very names for aye extinct, then pain shall be no more
Explanation
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)