thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalமெய்யுணர்தல்Meyyunardhal
குறள் 354

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

Aiyunarvu Eydhiyak Kannum Payamindre

Meyyunarvu Illaa Thavarkku

Knowledge of five senses is vain Without knowing the Truth within

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

MK (மு.கருணாநிதி)

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை

Couplet

Five-fold perception gained, what benefits accrueTo them whose spirits lack perception of the true

Explanation

Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things