thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகொல்லாமைKollaamai
குறள் 326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று.

Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel

Sellaadhu Uyirunnung Kootru

Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

SP (சாலமன் பாப்பையா)

கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.

MK (மு.கருணாநிதி)

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்

Couplet

Ev'n death that life devours, their happy days shall spare,Who law, 'Thou shall not kill', uphold with reverent care

Explanation

Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life