அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகொல்லாமைKollaamai
குறள் 323
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
Ondraaka Nalladhu Kollaamai Matradhan
Pinsaarap Poiyaamai Nandru
Not to kill is unique good The next, not to utter falsehood
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
SP (சாலமன் பாப்பையா)
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
MK (மு.கருணாநிதி)
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன
Couplet
Alone, first of goods things, is 'not to slay';The second is, no untrue word to say
Explanation
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood