thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகொல்லாமைKollaamai
குறள் 323

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று.

Ondraaka Nalladhu Kollaamai Matradhan

Pinsaarap Poiyaamai Nandru

Not to kill is unique good The next, not to utter falsehood

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

SP (சாலமன் பாப்பையா)

உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

MK (மு.கருணாநிதி)

அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன

Couplet

Alone, first of goods things, is 'not to slay';The second is, no untrue word to say

Explanation

Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood