thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalஇன்னா செய்யாமைInnaaseyyaamai
குறள் 317

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam

Maanaasey Yaamai Thalai

Any, anywhere injure not At any time even in thought

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

SP (சாலமன் பாப்பையா)

எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா திருப்பதே உயர்ந்தது.

MK (மு.கருணாநிதி)

எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்

Couplet

To work no wilful woe, in any wise, through all the days,To any living soul, is virtue's highest praise

Explanation

It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time