மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu
Thaananjey Vaarin Thalai
To speak the truth from heart sincere Is more than giving and living austere
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
SP (சாலமன் பாப்பையா)
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
MK (மு.கருணாநிதி)
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்
Couplet
Greater is he who speaks the truth with full consenting mindThan men whose lives have penitence and charity combined
Explanation
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities