அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகள்ளாமைKallaamai
குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aatral Purindhaarkanta Il
Men of measured wisdom shun Black art of fraud and what it won
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
SP (சாலமன் பாப்பையா)
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
MK (மு.கருணாநிதி)
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது
Couplet
Practice of fraud's dark cunning arts they shun,Who long for power by 'measured wisdom' won
Explanation
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude