thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகூடா ஒழுக்கம்Kootaavozhukkam
குறள் 278

மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.

Manaththadhu Maasaaka Maantaar Neeraati

Maraindhozhuku Maandhar Palar

Filthy in mind some bathe in streams Hiding sins in showy extremes

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

SP (சாலமன் பாப்பையா)

மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.

MK (மு.கருணாநிதி)

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்

Couplet

Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame

Explanation

There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of