thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalகூடா ஒழுக்கம்Kootaavozhukkam
குறள் 273

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Valiyil Nilaimaiyaan Valluruvam Petram

Puliyindhol Porththumeyn Thatru

Vaunting sainthood while week within Seems a grazer with tiger skin

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

MK (மு.கருணாநிதி)

மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்

Couplet

As if a steer should graze wrapped round with tiger's skin,Is show of virtuous might when weakness lurks within

Explanation

The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin