சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku
They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
SP (சாலமன் பாப்பையா)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
MK (மு.கருணாநிதி)
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்
Couplet
Taste, light, touch, sound, and smell: who knows the wayOf all the five,- the world submissive owns his sway
Explanation
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell