ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum
In penance lies the power to save The friends and foil the foe and knave
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
SP (சாலமன் பாப்பையா)
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.
MK (மு.கருணாநிதி)
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்
Couplet
Destruction to his foes, to friends increase of joyThe 'penitent' can cause, if this his thoughts employ
Explanation
If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities