thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalதவம்Thavam
குறள் 262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

Thavamum Thavamutaiyaarkku Aakum Adhanai

Aqdhilaar Merkol Vadhu

Penance is fit for penitents Not for him who in vain pretends

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

SP (சாலமன் பாப்பையா)

முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.

MK (மு.கருணாநிதி)

உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்

Couplet

To 'penitents' sincere avails their 'penitence';Where that is not, 'tis but a vain pretence

Explanation

Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)