thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalபுலால் மறுத்தல்Pulaanmaruththal
குறள் 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

Unnaamai Ulladhu Uyirnilai Oonunna

Annaaththal Seyyaadhu Alaru

Off with flesh; a life you save The eater hell's mouth shall not waive!

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.

SP (சாலமன் பாப்பையா)

இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.

MK (மு.கருணாநிதி)

உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன

Couplet

If flesh you eat not, life's abodes unharmed remain;Who eats, hell swallows him, and renders not again

Explanation

Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)