thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalபுலால் மறுத்தல்Pulaanmaruththal
குறள் 253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.

Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran

Utalsuvai Untaar Manam

Who wields a steel is steel-hearted Who tastes body is hard-hearted

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.

SP (சாலமன் பாப்பையா)

கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.

MK (மு.கருணாநிதி)

படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல

Couplet

Like heart of them that murderous weapons bear, his mind,Who eats of savoury meat, no joy in good can find

Explanation

Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness