thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்Thuravaraviyalபுலால் மறுத்தல்Pulaanmaruththal
குறள் 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்?

Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan

Engnganam Aalum Arul?

What graciousness can one command who feeds his flesh by flesh gourmand

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

SP (சாலமன் பாப்பையா)

தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?

MK (மு.கருணாநிதி)

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்

Couplet

How can the wont of 'kindly grace' to him be known,Who other creatures' flesh consumes to feed his own

Explanation

How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures