thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalதுறவறவியல்ThuravaraviyalஅருளுடைமைArulutaimai
குறள் 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi

Allavai Seydhozhuku Vaar

Who grace forsake and graceless act The former loss and woes forget

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

SP (சாலமன் பாப்பையா)

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

MK (மு.கருணாநிதி)

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்

Couplet

Gain of true wealth oblivious they eschew,Who 'grace' forsake, and graceless actions do

Explanation

(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)