thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalபாயிரவியல்Paayiraviyalநீத்தார் பெருமைNeeththaar Perumai
குறள் 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.

Irumai Vakaidherindhu Eentuaram Poontaar

Perumai Pirangitru Ulaku

No lustre can with theirs compare Who know the right and virtue wear

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது

SP (சாலமன் பாப்பையா)

இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது

MK (மு.கருணாநிதி)

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

Couplet

Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtue's robe arrayed

Explanation

The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others)