thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalஈகைEekai
குறள் 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

Paaththoon Mareei Yavanaip Pasiyennum

Theeppini Theental Aridhu

Who shares his food with those who need Hunger shall not harm his creed

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

MK (மு.கருணாநிதி)

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை

Couplet

Whose soul delights with hungry men to share his meal,The hand of hunger's sickness sore shall never feel

Explanation

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others