ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
Aatruvaar Aatral Pasiaatral Appasiyai
Maatruvaar Aatralin Pin
Higher's power which hunger cures Than that of penance which endures
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
MK (மு.கருணாநிதி)
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்
Couplet
'Mid devotees they're great who hunger's pangs sustain,Who hunger's pangs relieve a higher merit gain
Explanation
The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)