ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru
The wealth that wise and kind do make Is like water that fills a lake
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
SP (சாலமன் பாப்பையா)
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
MK (மு.கருணாநிதி)
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்
Couplet
The wealth of men who love the 'fitting way,' the truly wise,Is as when water fills the lake that village needs supplies
Explanation
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank