thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalவெஃகாமைVeqkaamai
குறள் 179

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு.

Aranarindhu Veqkaa Arivutaiyaarch Cherum

Thiranarin Thaange Thiru

Fortune seeks the just and wise Who are free from coveting vice

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

SP (சாலமன் பாப்பையா)

பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

MK (மு.கருணாநிதி)

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்

Couplet

Good fortune draws anigh in helpful time of need,To him who, schooled in virtue, guards his soul from greed

Explanation

Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others