thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்IllaraviyalவெஃகாமைVeqkaamai
குறள் 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra

Punmaiyil Kaatchi Yavar

The truth-knowers of sense-control Though in want covet not at all

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.

SP (சாலமன் பாப்பையா)

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

MK (மு.கருணாநிதி)

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்

Couplet

Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need

Explanation

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."