அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅழுக்காறாமைAzhukkaaraamai
குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth
Theeyuzhi Uyththu Vitum
Caitiff envy despoils wealth And drags one into evil path
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
SP (சாலமன் பாப்பையா)
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்
MK (மு.கருணாநிதி)
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்
Couplet
Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain
Explanation
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)