thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalஅழுக்காறாமைAzhukkaaraamai
குறள் 168

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth

Theeyuzhi Uyththu Vitum

Caitiff envy despoils wealth And drags one into evil path

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

SP (சாலமன் பாப்பையா)

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

MK (மு.கருணாநிதி)

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்

Couplet

Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain

Explanation

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)