thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalபிறனில் விழையாமைPiranil Vizhaiyaamai
குறள் 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.

Arankatai Nindraarul Ellaam Pirankatai

Nindraarin Pedhaiyaar Il

He is the worst law breaking boor Who haunts around his neighbour's door

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

SP (சாலமன் பாப்பையா)

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை

MK (மு.கருணாநிதி)

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்

Couplet

No fools, of all that stand from virtue's pale shut out,Like those who longing lurk their neighbour's gate without

Explanation

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door