thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபுலவி நுணுக்கம்Pulavi Nunukkam
குறள் 1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal

Yaarinum Yaarinum Endru

\"I love you more than all\" I said \"Than whom, than whom?\" she sulked and chid

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

SP (சாலமன் பாப்பையா)

காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.

MK (மு.கருணாநிதி)

``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்

Couplet

'I love you more than all beside,' 'T was thus I gently spoke;'What all, what all?' she instant cried; And all her anger woke

Explanation

When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky