thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்KarpiyalபுலவிPulavi
குறள் 1309

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.

Neerum Nizhaladhu Inidhe Pulaviyum

Veezhunar Kanne Inidhu

Water delights in a shady grove And sulking in souls of psychic love

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

SP (சாலமன் பாப்பையா)

நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

MK (மு.கருணாநிதி)

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

Couplet

Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love

Explanation

Like water in the shade, dislike is delicious only in those who love