thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்KarpiyalபுலவிPulavi
குறள் 1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.

Ootalin Untaangor Thunpam Punarvadhu

Neetuva Thandru Kol Endru

\"Will union take place soon or late?\" In lover's pout this leaves a doubt

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

SP (சாலமன் பாப்பையா)

இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

MK (மு.கருணாநிதி)

கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு

Couplet

A lovers' quarrel brings its pain, when mind afraidAsks doubtful, 'Will reunion sweet be long delayed?'

Explanation

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike