thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்KarpiyalபுலவிPulavi
குறள் 1304

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.

Ooti Yavarai Unaraamai Vaatiya

Valli Mudhalarin Thatru

To comfort not lady in pout Is to cut the fading plant at root He within Himself

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

SP (சாலமன் பாப்பையா)

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

MK (மு.கருணாநிதி)

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்

Couplet

To use no kind conciliating art when lover grieves,Is cutting out the root of tender winding plant that droops

Explanation

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root