thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநெஞ்சொடு புலத்தல்Nenjotupulaththal
குறள் 1298

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

Ellin Ilivaamendru Enni Avardhiram

Ullum Uyirkkaadhal Nenju

My heart living in love of him Hails his glory ignoring blame

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

SP (சாலமன் பாப்பையா)

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

MK (மு.கருணாநிதி)

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்

Couplet

If I contemn him, then disgrace awaits me evermore;My soul that seeks to live his virtues numbers o'er

Explanation

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him