thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபுணர்ச்சி விதும்பல்Punarchchividhumpal
குறள் 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

பொய்த்தல் அறிந்தென் புலந்து.

Uyththal Arindhu Punalpaai Pavarepol

Poiththal Arindhen Pulandhu

To leap in stream which carries off When lord is close to feign a huff

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?

SP (சாலமன் பாப்பையா)

தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?

MK (மு.கருணாநிதி)

வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?

Couplet

As those of rescue sure, who plunge into the stream,So did I anger feign, though it must falsehood seem

Explanation

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?