thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalபுணர்ச்சி விதும்பல்Punarchchividhumpal
குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்

காணா தமையல கண்.

Penaadhu Petpave Seyyinum Konkanaik

Kaanaa Thamaiyala Kan

Though slighting me he acts his will My restless eyes would see him still

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

SP (சாலமன் பாப்பையா)

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

MK (மு.கருணாநிதி)

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை

Couplet

Although his will his only law, he lightly value me,My heart knows no repose unless my lord I see

Explanation

Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him