thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஅவர்வயின் விதும்பல்Avarvayinvidhumpal
குறள் 1267

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்

கண்அன்ன கேளிர் விரன்.

Pulappenkol Pulluven Kollo Kalappenkol

Kananna Kelir Viran

If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?

SP (சாலமன் பாப்பையா)

கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?

MK (மு.கருணாநிதி)

கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது

Couplet

Shall I draw back, or yield myself, or shall both mingled be,When he returns, my spouse, dear as these eyes to me

Explanation

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?