thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalஅவர்வயின் விதும்பல்Avarvayinvidhumpal
குறள் 1265

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்

நீங்கும்என் மென்தோள் பசப்பு.

Kaankaman Konkanaik Kannaarak Kantapin

Neengumen Mendhol Pasappu

Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

SP (சாலமன் பாப்பையா)

என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

MK (மு.கருணாநிதி)

கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்

Couplet

O let me see my spouse again and sate these longing eyes!That instant from my wasted frame all pallor flies

Explanation

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders