thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநிறையழிதல்Niraiyazhidhal
குறள் 1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின்.

Naanena Ondro Ariyalam Kaamaththaal

Peniyaar Petpa Seyin

When lover's love does what it desires We forget all shame unawares

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.

SP (சாலமன் பாப்பையா)

என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.

MK (மு.கருணாநிதி)

நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை

Couplet

No sense of shame my gladdened mind shall prove,When he returns my longing heart to bless with love

Explanation

I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)